» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றாலம் சாரல் திருவிழாவில் யோகா போட்டி : பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 12:45:32 PM (IST)
குற்றாலம் சாரல் திருவிழாவில் இந்திய மருத்தும் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான யோகா போட்டி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதிகை பெருவிழா 6-ம் நாள் சாரல் திருவிழாவில் இந்திய மருத்தும் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான யோகா போட்டி நடைபெற்றது. போட்டியில் மாணவி இந்து முதலிடம் பெற்றார். மாணவி தீபிகா இரண்டாம் இடமும் விஜயலட்சுமி மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கலந்து கொண்ட சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி திருநெல்வேலி மாவட்ட சித்த மருத்துவர் அலுவலர் உஷா, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்த மரியா, துணை முதல்வர் சௌந்தர் ராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.