» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிண்டி கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் பலி: 2 பேர் காயம்
திங்கள் 8, ஆகஸ்ட் 2022 8:27:34 AM (IST)
சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே மிகப்பெரிய சாலை வழிகாட்டி பெயர் பலகை திடீரென பெயர்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மிகப்பெரிய சாலை வழிகாட்டி பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த வழிகாட்டி பெயர் பலகையானது திடீரென தரையை மட்டத்திலிருந்து அடியோடு பெயர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக விழுந்தது.
இந்த நிலையில் மிகப்பெரிய பெயர் பலகை மேலே விழுந்ததில் மினி வேன் சாலையில் கவிழ்ந்தது. மேலும், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தினால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெயர் பலகை மேலே விழுந்ததில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அந்த பகுதியினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியிலும், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய வழிகாட்டி பெயர் பலகை திடீரென பெயர்ந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
RAJANAug 8, 2022 - 10:40:59 AM | Posted IP 162.1*****