» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் போலீஸ்காரர் கைது!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 12:18:54 PM (IST)
மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தன்னுடைய தாயுடன் தாம்பரத்தில் இருந்து அரசு பஸ்சில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (35) அமர்ந்திருந்தார்.
ஓடும் பஸ்சில் சதீஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை பஸ்சில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாயார் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அவரை தாக்கி உள்ளனர். பஸ் மதுராந்தகத்தை அடையும் போது அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சதீஷ் மதுராந்தகத்தை அடுத்த முதுகரை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் சென்னை பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் சதீஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துரோக சிந்தனை உடைய கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது: ஈபிஎஸ் மீது தினகரன் தாக்கு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:03:52 PM (IST)

தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 3:36:09 PM (IST)

ஒன்றினைந்து செயல்படுவோம்: சசிகலா, எடப்பாடி, தினகரனுக்கு ஒபிஎஸ் அழைப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:48:07 AM (IST)

இந்து மகாசபா தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: கார் கண்ணாடிகள் உடைப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:33:42 AM (IST)

கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்தம்: அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:19:56 AM (IST)

கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டடத் தொழிலாளி அடித்து கொலைB: நெல்லையில் பயங்கரம்!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:17:10 AM (IST)
