» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் அறிவிப்பு

வெள்ளி 20, மே 2022 4:38:23 PM (IST)

தமிழகத்தில் பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

மழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 120-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 75 முதல் ரூ. 85 வரை விற்கப்படும் என்றும் நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலுள்ள கூட்டுறவுத் துறை பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory