» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் அறிவிப்பு
வெள்ளி 20, மே 2022 4:38:23 PM (IST)
தமிழகத்தில் பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 120-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 75 முதல் ரூ. 85 வரை விற்கப்படும் என்றும் நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலுள்ள கூட்டுறவுத் துறை பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.