» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முல்லைப் பெரியாறு பிரச்சனை: தமிழக-கேரள எல்லையில் 5 மாவட்ட விவசாயிகள் முற்றுகை
ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:31:59 PM (IST)
தமிழக-கேரளதமிழக-கேரள எல்லை லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும் என்று கோரி இன்று கேரள மாநிலத்தில் பைக் வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு அனுமதிக்கக் கூடாது என்று பெரியார் வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் மத்திய அரசு கோரிக்கை வைத்தனர். தமிழக-கேரள எல்லையை முற்றுகையிட்டு போராடுவோம் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த ஐந்து மாவட்ட விவசாயிகளை, உத்தமபாளையம் ஏ. எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் மறுத்தனர். சாலை மறியல் செய்வதற்கு அனுமதி தாருங்கள், கேரளத்தில் வாகன பேரணி சென்று கொண்டிருக்கிறது என்று கோரிக்கை வைத்தனர். போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பென்னிகுயிக் மண்டபம் செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டம் எதிரொலியாக, குமுளி லோயர் கேம் மலைச் சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன. எல்லை லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டம் எதிரொலியாக, குமுளி லோயர் கேம் மலைச் சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன.