» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை
வெள்ளி 26, நவம்பர் 2021 7:26:21 PM (IST)
கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாக இருந்தது. இதனால் நேற்று நாள் முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை சாலை, முக்கடல் சங்கமம் பகுதி ஆகிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, நாளை (27.11.2021) மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.