» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜேந்திர பாலாஜி வழக்கு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

திங்கள் 20, செப்டம்பர் 2021 4:30:02 PM (IST)

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோது வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினர். பின்னர், இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அபோது ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து, ராஜேந்திர பாலாஜியின் மேல் முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory