» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இ-சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்: ஆட்சியர் தகவல்
சனி 18, செப்டம்பர் 2021 4:17:53 PM (IST)
இ-சேவை மையங்களில் விலையில்லா வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 01.10.2021 முதல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும். எனவே அனைத்து வாக்காளர்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.