» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தற்கொலைக்கு துாண்டும் பொய்யான பரப்புரைகள்: மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

வியாழன் 16, செப்டம்பர் 2021 10:30:52 AM (IST)

"தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்" என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவர்களே உங்கள் கனவை மேலும் விரிவாக்குங்கள். மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காவிட்டால் உலகம் இருண்டு போக போவதில்லை. விடாமுயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்.  தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்.  

உங்களால் தேர்ச்சி பெற முடியாவிட்டால் உங்கள் பயிற்சி முறையிலோ பாடத்திட்ட முறையிலோ தேர்வுக்கு தயாரகும் முறையிலோ மாற்றம் தேவைப்படுகிறது என உணருங்கள். உங்களை நேசிக்க துவங்குங்கள். புத்தகங்களை வாசிக்க துவங்குங்கள். பெரியோரிடம் அறிவுரைகளை யாசிக்க துவங்குங்கள். தேர்வுகளை கடப்பது எப்படி என யோசிக்க துவங்குங்கள். படிப்பின்மீது பிடிப்போடு இருங்கள்.  நாளைய உலகம் உங்களுடையது என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory