» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 2 தனித்தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி: தமிழக அரசு அறிவிப்பு

சனி 31, ஜூலை 2021 3:33:20 PM (IST)

பிளஸ் 2 தேர்வெழுத தனித் தேர்வர்களாக விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மதிப்பெண் நடைமுறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வெழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு அளித்துள்ள தமிழக அரசு, மாற்றித்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் +2 தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ளது. மேலும், மதிப்பெண்களின் அடிப்படையில் சுய விருப்பத்தின் பேரில் மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதலாம் என்றும், தேர்வின் முடிவே இறுதியானது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory