» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத ரீதியாக செயல்படும் இன்ஸ்பெக்டர், விஏஓ மீது நடவடிக்கை: எஸ்.பி.,யிடம் மூதாட்டி புகார்

சனி 31, ஜூலை 2021 10:16:07 AM (IST)



மத ரீதியாக செயல்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ.,மீது தென்காசி மாவட்ட எஸ்பியிடம் மூதாட்டி ஒருவர் புகார் அளித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் கடையம்  அருகேயுள்ள பூவனுமாரைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி பொன்னம்மாள் (வயது 72). இவர் இந்துமுன்னணி பிரமுகர்களுடன் வந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அம்மனுவில் பூவனூரில் ஆக்ரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக இந்து முன்னணி பொறுப்பாளர் பரமசிவன் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். குறிப்பிட்ட பிரிவினர் ஆக்ரமிப்புகளை அகற்றாமல் மற்றொரு பிரிவினரின் ஆக்ரமிப்புகளை மட்டும் அகற்றப்பட்டது. இது தொடர்பாக கேள்வி கேட்டதற்கு எனது மகன் செல்லத்துரை மீது கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் எனது வீட்டில் கட்டியிருந்த இந்துமுன்னணி கொடியை இன்ஸ்பெக்டர் மிரட்டி அகற்ற கூறிவிட்டார். என்னையும் மிரட்டினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் இல்லை. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மூலம் புகார் பெற்று போலீசார் என் மகன் மீதும், எனது பேரன்; மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத ரீதியாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் பொன்னம்மாள் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory