» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 19, ஜூன் 2021 3:56:31 PM (IST)
நாகர்கோவில் - பெங்களூரு இடையே வருகிற 21ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு : தற்போது தூத்துக்குடியிலிருந்து மதுரை, பெங்களூர் வழியாக மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயக்கப்பட இருக்கிறது.
வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோயில் ஜூன் 21 முதலும் வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் ஜூன் 22 முதலும் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். நாகர்கோவில் சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து மாலை 5 மணிக்கும், பெங்களூரு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.10 க்கும் புறப்படும்.