» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா? - பொதுமக்கள் கொந்தளிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:49:40 AM (IST)
தூத்துக்குடியில் வரி செலுத்தாத ஏழை எளிய மக்களின் வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் லட்சக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ள திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சில ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ள ஏழை எளிய மக்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் போக்கிற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனுமதியின்றி இயங்கும் திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் பல லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளன. குறிப்பாகப் பிரபலத் தனியார் பள்ளி ஒன்று ₹23 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளது.
₹23 லட்சம் பாக்கி வைத்துள்ள பள்ளி மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ₹5,000 பாக்கி வைத்திருந்த ஏழைத் தொழிலாளியின் வீட்டுக் குடிநீர் இணைப்பை உடனடியாகத் துண்டித்துள்ளனர். ஆனால், அதே பகுதியில் ₹38,000 பாக்கி வைத்திருந்த வசதிபடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
பணபலம் உள்ள பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், ஏழைகளுக்கு எதிராகவும் "ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு" எனப் பாகுபாடு காட்டும் மாநகராட்சி நிர்வாகம், உடனடியாகக் கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்களிடம் வரிகளை வசூலிக்க வேண்டும் என்றும், விதிமீறிய கட்டிடங்களுக்குச் சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)










naan thaanAug 10, 2026 - 04:47:50 PM | Posted IP 104.2*****