» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:05:20 AM (IST)
கையில் அரிவாளுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' ஆக பதிவிட்ட வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், தற்போது குடும்பத்துடன் ஆறுமுகநேரி பூவரசூரில் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா (26). இவர் தனது கையில் பெரிய அரிவாளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி, நாக்கை துருத்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து எழுந்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ரென்னீஸ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சூர்யாவை அதிரடியாகக் கைது செய்தார். பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 9 வழக்குகளும், பாளையங்கோட்டை மற்றும் நெல்லை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)










தலைவன் வடலிAug 3, 2026 - 02:17:07 PM | Posted IP 162.1*****