» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு!

வியாழன் 9, ஜூலை 2026 11:18:55 AM (IST)

கயத்தாறு அருகே பள்ளிக்குச் செல்லுமாறு தாய் அறிவுறுத்தியதால் 12-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம் காலனித் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார், விவசாயி மற்றும் தினக்கூலி தொழிலாளி. இவரது மகள் வர்ஷா (17), பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக வர்ஷா பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். 

இதனால் வர்ஷாவின் தாயார், மகளிடம் பள்ளிக்குச் செல்லுமாறு அறிவுரை கூறிவிட்டு காட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வர்ஷா அறையின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய தாயார் கதவைத் திறந்து பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory