» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை - திருச்செந்தூர் இரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து!

புதன் 8, ஜூலை 2026 5:37:25 PM (IST)

திருச்செந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிப்பு: பயணிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு

மதுரை கோட்டத்தில் நடைபெறவுள்ள இரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாகத் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இரு இரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை 15, 18, 21, 24, 27, 31 ஆகிய 6 நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4:25 மணிக்குத் திருநெல்வேலி செல்லும் பயணிகள் இரயில் (வண்டி எண்: 56754) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, ஜூலை 15, 18, 21, 24, 27, 31 ஆகிய 6 நாட்கள் பாலக்காடு - திருச்செந்தூர் இரயில் (வண்டி எண்: 16731) மணியாச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த இரயில் பாலக்காட்டில் இருந்து மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.

பாலக்காடு சென்றடையும் நேரத்தில் மாற்றம்: 

மறு மார்க்கத்தில், ஜூலை 18, 21, 24, 27, 30, 31 ஆகிய 6 நாட்கள் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில் (வண்டி எண்: 16732) திருச்செந்தூரில் இருந்து நண்பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, 50 நிமிடங்கள் தாமதமாக பாலக்காடு சென்றடையும் எனத் தென்னக இரயில்வே மதுரை மண்டலம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory