» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் மனைவியுடன் தகராறு: வாலிபர் தற்கொலை!

திங்கள் 6, ஜூலை 2026 10:45:25 AM (IST)

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையார்கோவில் தெருவைச் சேர்ந்த பெனிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த டென்சிங் (29). இவரது மனைவி சுபிஷா (27). இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. டென்சிங்கிற்கு அடிக்கடி மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று குடிபோதையில் இருந்த டென்சிங், சுபிஷாவை அடித்துத் துன்புறுத்தி வீட்டின் உள்ளே தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சுபிஷா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த டென்சிங் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

காதோல்Jul 7, 2026 - 04:27:35 PM | Posted IP 162.1*****

பண்ணுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory