» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.72 லட்சம் பண மோசடி : தவெக நிர்வாகி - மனைவி மீது வழக்குப் பதிவு!
புதன் 3, ஜூன் 2026 12:20:16 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.72 லட்சம் பண மோசடி செய்ததாக தவெக நிர்வாகி மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, பரமன்குறிச்சி பிச்சுவிளையைச் சேர்ந்தவர் கோபி (45). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் ஏரல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் ராஜா என்பவருக்குச் சொந்தமான ரூ.90 லட்சத்திற்கு விலை பேசியுள்ளனர்.
இதற்கென முதற்கட்ட முன்பணமாக ரூ.72 லட்சத்தை அவரிடம் கோபி செலுத்தியுள்ளார். இதனை முன்பணமாகப் பெற்றுக் கொண்ட ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய இருவருடன், மீதித் தொகை ரூ.18 லட்சத்தை வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் வழங்கி கிரைய ஆவணம் பதிவு செய்துகொள்ள வேண்டும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வங்கி கணக்கில் ரூ.72 லட்சம் பணம் ஏறியவுடன், ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் சொத்தை கிரயம் செய்து தராமல் கோபியுடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். மேலும், தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு ஊரை காலி செய்துவிட்டுத் தலைமறைவாகினர். இது குறித்துக் கோபி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபி, இது குறித்துத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ஏரலைச் சேர்ந்த ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள ராஜா தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









