» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழப்பு!
புதன் 3, ஜூன் 2026 11:51:43 AM (IST)
முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அடுத்த அகரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடத்தி (66). இவர் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மாடத்தி தனது மகள் பேச்சியம்மாள் மற்றும் மகன் அண்ணாமலை ஆகியோரது வீடுகளில் மாறி மாறித் தங்கி வாழ்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நேற்று வழக்கம்போல் 100 நாள் வேலையை முடித்துவிட்டு, மாலை 06.00 மணியளவில் வீட்டில் இருந்து குளிப்பதற்காகத் தாமிரபரணி ஆற்றிற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் வழக்கம்போலத் தனது மகள் அல்லது மகன் வீட்டில் தங்கியிருக்கலாம் என உறவினர்கள் நினைத்ததால், நேற்று இரவு அவரை யாரும் தேடவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை மாடத்தி 100 நாள் வேலைக்குச் செல்லவில்லை என்று தெரியவந்ததை அடுத்து, உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பல்வேறு இடங்களில் விசாரித்துத் தேடினர். அப்போது, தாமிரபரணி ஆற்றங்கரையில் மாடத்தி இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு காவல் ஆய்வாளர், உயிரிழந்த மாடத்தியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









