» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை-தூத்துக்குடி தனியார் பஸ் கட்டணம் உயர்வு : பயணிகள் அதிர்ச்சி

ஞாயிறு 24, மே 2026 10:50:10 AM (IST)

டீசல் விலை ஏற்றம் காரணமாக நெல்லை-தூத்துக்குடி இடையே தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் -அமெரிக்கா நாடுகள் தொடர்ந்து மோதி வருகின்றன. இதனால் இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல், கியாஸ் போன்ற எரிபொருட்களை கொண்டு வரமுடியவில்லை. அவ்வப்போது குறைந்த அளவு எரிபொருட்கள் வந்து சேருகிறது. இதையொட்டி நாட்டில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டது. 

தற்போது பெட்ரோல், டீசல் விலை 3 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல்வேறு பொருட்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும் வாகனங்களின் வாடகையும் உயர்த்தப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் தனியார் பஸ்களும் தங்களது டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதாவது தூத்துக்குடி -நெல்லை இடையே இயக்கப்படும் சாதாரண தனியார் பஸ்களுக்கான கட்டணம் ரூ.35 வசூலிக்கப்பட்டு வந்தது. 

நேற்று முதல் இந்த கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். அதே நேரத்தில் அரசு சாதாரண பஸ்களில் ரூ.35-ம், ‘எண்ட் டூ எண்ட்' இடைநில்லா பஸ்களில் ரூ.50-ம், ஏ.சி. பஸ்களுக்கு ரூ.61-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory