» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:38:38 PM (IST)
திருநெல்வேலியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி டவுன் ஜங்ஷன், கைலாசபுரம் ஆற்று படுகை அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகித் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
விசாரணையில் அவர் திருநெல்வேலி சந்திப்பு, முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் இசக்கிபாண்டி (24) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 80 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டியை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









