» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

வீரபாண்டியன்பட்டணம் கடலில், தூண்டில் வளைவு முறையாக அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவால் ஏற்பட்ட மணல் திட்டுகளை அகற்றவும், தூண்டில் வளைவை மாற்றி அமைக்க வலியுறுத்தியும் கடந்த 21 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடற்கரை பகுதியில் மீன் இறக்கும் கூடாரத்தில் மீனவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊர் நலக்கமிட்டி தலைவர் பெயிட்டன், துறைமுக கமிட்டி தலைவர் ஜெபமாலை தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்குதந்தை அலாய்சியஸ், பெரியதாழை, மணப்பாடு. குலசை, கல்லாமொழி, ஆலந்தலை, அமலிநகர், திருச்செந்தூர் ஜீவாநகர், சிங்கித்துறை, கொம்புத்துறை, புன்னக்காயல், பழையகாயல், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். மேலும் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர் தலைமையில் போராட்ட குழுவினருக்கு ஆதரவளித்து பங்கேற்றனர்.
இதில் மாவட்ட இணைச் செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் முத்து கனி முருகேசன், மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதி குமார், ராஜபோஸ் முகைதீன், அமிர்தா, சஜினா, ரோகிணி, மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பத்ரி பிரசாத், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆசிர் ராஜ்குமார்,உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயராஜ், காயல்பட்டணம் நகரச் செயலாளர் ஹனிபா, திருச்செந்தூர் நகரச் செயலாளர் முருகானந்தம், ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் நிவாஸ், நாசரேத் பேரூர் கழக செயலாளர் சுதர்சன், உட்பட 200 க்கு மேற்பட்ட மாவட்ட, நகர ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் மாவட்டச் செயலாளர் பிரைட்டர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்படும் பகுதியினை ஆய்வு மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் தீவிர சோதனை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:09:03 PM (IST)

தூத்துக்குடியில் 50 ஆண்டுகால பயணிகள் நிழற்குடை இடிப்பு: முன்னாள் மேயர் கண்டனம்; கவுன்சிலர் விளக்கம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:58:57 PM (IST)











AsoniyaJan 20, 2026 - 10:53:54 PM | Posted IP 172.7*****