» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)
தமிழகத்தில் பிப்.3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பரக்கத்துகள் நிறைந்த பராஅத் இரவு அனுசரிக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று (19-01-2026, திங்கட்கிழமை) ஹிஜ்ரீ 1447 ஷஃபான் மாத பிறை தென்படவில்லை. இதனால் ரஜப் மாதம் 30 நாள்களாக பூர்த்தி செய்யப்படுவதாகவும், வருகிற 21-01-2026 புதன்கிழமை ஷஃபான் பிறை 1 தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 03-02-2026 செவ்வாய்க்கிழமை மாலை பின்னேரம் (ஷஃபான் பிறை 15) பரக்கத்துகள் நிறைந்த பராஅத் இரவு அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 04-02-2026 புதன்கிழமை நிஸ்ஃபு ஷஃபான் தினமாகும் என்றும், அன்றைய தினம் சுன்னத்தான நோன்பு நோற்கும் நாள் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாஅத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொது அமைதிக்கு பங்கம்: ஒரே நாளில் 5பேர் கைது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 9:08:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)










