» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா

வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)



தூத்துக்குடியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோசாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் கோமாதா சேவா டிரஸ்ட் சார்பில் கோசாலையில் பசுக்கள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இன்று காலையில் அதன் நிறுவனர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டின பசுக்களை காலையில் குளிப்பாட்டி சந்தனம் குங்குமம் ஆகியவை பூசி புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு கிருஷ்ணர் ஆண்டாள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மாட்டுப்பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

இந்த கோசாலையில் காங்கேயம், தென்பாண்டி நாடு, கிர், ஓங்கல், காங்கிரிட்ஜ், புங்கனூர் குட்டை உள்ளிட்ட 12 வகையான சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டின பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மாடுகளுக்கு பிடித்த கரும்பு, வாழைப்பழம், அகத்திக்கீரை மற்றும் பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உழவர்களின் நண்பனான நாட்டின பசுக்களை மலர் தூவி வழிபட்டனர். பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory