» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் பைக் எரிப்பு: போலீசார் விசாரணை

ஞாயிறு 11, ஜனவரி 2026 9:07:16 AM (IST)

தூத்துக்குடியில் திமுக பிரமுகர் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் டேனியல் (44). இவர், மாநகர திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். டேனியல் தனது பைக்கை நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மர்ம நபர்கள் அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இதில் பைக் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த சாம்சன், முன் விரோதம் காரணமாக பைக்கை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory