» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆத்தூர் அருகே 2 ஆடுகள் திருடியவர் கைது

ஞாயிறு 11, ஜனவரி 2026 9:05:58 AM (IST)

ஆத்தூர் அருகே 2 ஆடுகளை திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரை அடுத்த மேலஆத்தூர், குச்சிக்காட்டைச் சேர்ந்தவர் செல்வி (64). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டு தாழ்வாரத்தில் 5 ஆடுகளை கட்டிப் போட்டுவிட்டு தூங்கச் சென்றாராம். இந்நிலையில் ஆடுகளின் சத்தம் கேட்டு செல்வி, அவரது மகன்கள் வந்து பார்த்துபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், 2 ஆடுகளை திருடி கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, மேல ஆத்தூர் கண்ணானி தெருவைச் சேர்ந்த அருள்குமார் மகன் பார்த்திபனை கைது செய்து, 2 ஆடுகளை மீட்டனர். தலைமறைவான ஆத்தூர் அருகே நரசன்விளையைச் சேர்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory