» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி

ஞாயிறு 11, ஜனவரி 2026 9:02:26 AM (IST)

தூத்துக்குடியில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை உயர்ந்திருந்தது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்புக்குச் சென்ற நாட்டுப் படகுகள் நேற்று கரை திரும்பின. கடல் பகுதியில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக, மீன்கள் வரத்து குறைவாகக் காணப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால், மீன்களின் விலை உயர்ந்திருந்தது.

சீலா மீன் கிலோ ரூ. 1,100 வரை, விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ. 500 - ரூ. 700, நண்டு கிலோ ரூ. 800 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,000 - ரூ. 2,500, கேரை, சூரை ஆகியவை ரூ. 250 - ரூ. 300 என விற்பனையாகின. வரத்து குறைந்தபோதும் மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வானிலை எச்சரிக்கை : படகுகள் நிறுத்தம்!

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடல், குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீன்வளம்-மீனவர் நலத் துறை சார்பில், விசைப்படகு, நாட்டுப் படகுகள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குத் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 270- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டன. 

இதேபோல தருவைகுளம், வேம்பார், வீரபாண்டியன்பட்டினம், ராஜபாளையம், சிங்கத்துறை, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், பைபர் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory