» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பியாக சுனில் நியமனம் : டிஜிபி உத்தரவு

சனி 10, ஜனவரி 2026 9:17:01 PM (IST)

தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பியாக சுனில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 88 போலீஸ் டிஎஸ்பிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஏற்கனவே தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி ஆக இருந்த மதன் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலிக்கு சென்று விட்டார் இவருக்கு பதிலாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த சுனில் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், மதுரை சிட்டி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். மணியாச்சி டிஎஸ்பி அருள் மதுரைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நெல்லை சிட்டியில் பணிபுரிந்து வந்த அஞ்சுகுமார் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 88 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்து தமிழக டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டு உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory