» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா: முதன்மை நீதிபதி பரிசுகள் வழங்கினார்!

சனி 10, ஜனவரி 2026 8:43:22 PM (IST)



தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி பரிசுகள் வழங்கினார். 

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டனர். பின்னர் மியூசிக்கல் சேர், லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டான்லி பிரபு வரவேற்று பேசினார். 

நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. வாரியார் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்களுக்கு பரிசுகளைவழங்கினார். வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் சிவசங்கர், செயலாளர் செல்வின், இணைச் செயலாளர் பாலகுமார், பொருளாளர் கணேசன், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட், வழக்கறிஞர்கள் எஸ்.எஸ்.பி. அசோக், கிறிஸ்டோபர், விஜயராஜ், உஷா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory