» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா: முதன்மை நீதிபதி பரிசுகள் வழங்கினார்!
சனி 10, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டனர். பின்னர் மியூசிக்கல் சேர், லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டான்லி பிரபு வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. வாரியார் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்களுக்கு பரிசுகளைவழங்கினார். வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் சிவசங்கர், செயலாளர் செல்வின், இணைச் செயலாளர் பாலகுமார், பொருளாளர் கணேசன், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட், வழக்கறிஞர்கள் எஸ்.எஸ்.பி. அசோக், கிறிஸ்டோபர், விஜயராஜ், உஷா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)

லாரி மீது வேன் மோதி 2 பேர் பரிதாப பலி : தூத்துக்குடி அருகே சோக சம்பவம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:50:15 AM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 41ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி
வெள்ளி 16, ஜனவரி 2026 11:40:38 AM (IST)

பா.ஜ.க. கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
வெள்ளி 16, ஜனவரி 2026 11:31:16 AM (IST)

தூத்துக்குடி நல்லாயன் பள்ளியில் பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 11:16:57 AM (IST)

மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)








