» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சதி திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது

சனி 10, ஜனவரி 2026 8:31:10 PM (IST)

தூத்துக்குடியில் சதி திட்டம் தீட்டியதாக 7வாலிபர்களை வடபாகம் போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புதிய பேருந்து நிலையம் அருகே போல்பேட்டை ரோட்டில் நின்று கொண்டிருந்த 7 வாலிபர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 7பேரும் சதி திட்டம் தீட்டி கொண்டிருந்ததாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாசிலாமணிபுரத்தை சேர்ந்த நோபல் மகன் ஜேம்ஸ் (19), ராஜபாண்டி நகரை சேர்ந்த சசிகுமார் மகன் சரண் (23), பங்களா தெரு பச்சை மகன் சிவப்பிரகாஷ் (20), ரகமத்துலா புரம்  சேது மகன் ஜெயக்குமார் (19), 3ஆவது மைல் கருப்பசாமி மகன் சின்னத்துரை (23), பக்கிள்புரம் சசிகுமார் மகன் சத்குரு (21), லெவிஞ்சி புரம் அமராவதி மகன் சக்திவேல் (24) ஆகிய 7பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory