» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமத்துவ மக்கள் கழகம், நாடார் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா

சனி 10, ஜனவரி 2026 4:38:08 PM (IST)


தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவிற்கு சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ஏ.எஸ்.ஆர். பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். 

அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகளிர் அணி நிர்வாகிகள் பொங்கலிட்டனர். பொங்கல் விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மாவட்ட எல் ஐ சி கணேசன் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் "லயன்" பழனிவேல் மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன் மாவட்ட பிரதிநிதி முருகேசன் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெய கசமாடன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் மாலைசூடி ராஜா  உள்பட பலர் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory