» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி–சென்னை கூடுதல் இரவு ரயில் இயக்க வேண்டும் : பாரதிய ஜனதா கோரிக்கை !!
சனி 10, ஜனவரி 2026 4:24:42 PM (IST)
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் இரவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன் அனுப்பியுள்ள கடிதத்தில் "தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது 12693/12694 முத்துநகர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் உடனடியாக நிரம்பி விடுவதால் முன்பதிவு செய்து பயணிக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி–சென்னை லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாகவும், அதிகரித்து வரும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டும், 22623/22624 மதுரை–தாம்பரம் மகால் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து தினசரி இயக்கம் வழங்க வேண்டும்.
இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டால், சென்னைக்கு அதிகாலை நேரத்தில் சென்றடையவும், இரவு நேரத்தில் புறப்படவும் வசதி கிடைக்கும் என்றும், தஞ்சாவூர்–கும்பகோணம் வழியாக பிரதான ரயில் பாதைக்கு தினசரி இணைப்பு கிடைக்கும். எனவே, தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மகால் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
PremkumarJan 11, 2026 - 08:34:08 PM | Posted IP 162.1*****
Demanding still,no train coming.Hope this may happen
SUNDARJan 10, 2026 - 08:51:30 PM | Posted IP 162.1*****
GOOD DEMAND
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வாலிபர் கைது; செல்போன் பறிமுதல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:07:04 AM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)











கே.கணேசன்.Jan 12, 2026 - 06:17:33 PM | Posted IP 162.1*****