» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி!

வெள்ளி 9, ஜனவரி 2026 11:01:17 AM (IST)

தூத்துக்குடியில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கணேசன் (21). இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று திருநெல்வேலி சென்றுவிட்டு அதிகாலை 2 மணியளவில் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். 

பொட்டலூரணி விலக்கு, வாகைகுளம் அருகே வந்தபோது முன்னால் சென்று காெண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இவரது பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory