» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் காயமடைந்தார்.

சென்னை பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஆரிஸ் (29). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 3 நண்பர்கள் மூன்று பேருடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று வந்தனர். நண்பர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு உள்ளே சென்றனர். 

ஆரிஸ் மட்டும் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து கைப்பேசியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மரத்தில் இருந்து காய்ந்த கிளை முறிந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory