» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் யானையிடம் ஆசிபெற்ற பாகனின் மகள்கள்!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:45:15 AM (IST)



திருச்செந்தூர் கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகனின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அவரது மகள்கள், யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த ஆண்டு தெய்வானை யானை எதிர்பாராத விதமாக தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து யானை, கோவில் நிர்வாகத்தின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. யானை சகஜ நிலைக்கு திரும்பியதையடுத்து திருவிழாக்களில் பங்கேற்று வருகிறது. 

இந்நிலையில் பாகன் உயிரிழந்து ஓராண்டானதையடுத்து, அவரது மகள்கள் அக்ஷரா, அகல்யா ஆகியோர், தெய்வானை யானைக்கு பழங்கள், கரும்பு கொடுத்து ஆசி பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory