» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏரல் ஆற்றங்கரையில் ஸ்ரீ கணேசர் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் தூய்மைப்பணி

செவ்வாய் 2, டிசம்பர் 2025 7:45:44 PM (IST)



ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

நெல்லை 9 சிக்னல் கம்பெனி அதிகாரி கமாண்டிங் பங்கஜ் நாராயணன் அலோசனையின்பேரில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி என்.சி., சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. பள்ளி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி., அலுவலர் ராஜகுமார் வரவேற்றார். தலைமையாசிரியர் (பொறுப்பு) சுரேஷ் காமராஜ் கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். 9 சிக்னல் கம்பெனி சுபேதார் ஜெகத் சிங், டி.ஹெச்.எம். சுந்தர் ஆகியோர் வழி நடத்தினர். 

இந்த பணியில் மாணவ, மாணவிகள் 85 பேர் கலந்து கொண்டு ஆற்றின் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் பைகள், உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகித குப்பைகளை சேகரித்து ஏரல் டவுண் பஞ்., குப்பை தொட்டியில் சேர்த்தனர். பணியில் ஈடுபட்ட மாணவர்களை ஸ்ரீ கணேசர் ஆங்கிலப்பள்ளி முதல்வர் டாக்டர் மௌலாதேவி, ஏரல் வியாபாரி சங்க செயலாளர் விஜயராகவன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை ஸ்ரீ கணேசர் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலகம் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory