» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகம்!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)



தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளான 65 வயதிற்கு மேற்பட்ட வயதான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அவர்களது குடிமைப்பொருட்கள் டிச.2 மற்றும் 3ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் மூலம் அவர்களது வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி இன்று தூத்துக்குடி அமுதா நகர் ரேஷன் கடை கடையில் பணிபுரியும் ஊழியர்கள் ரேஷன் பொருள்கள் வழங்கினர். இதுபோல் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory