» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரியில் இருந்து தவறி விழுந்து லோடு மேன் பலி

செவ்வாய் 2, டிசம்பர் 2025 3:36:41 PM (IST)

தூத்துக்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த லோடு மேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  

தூத்துக்குடி சுந்தர ராமபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (45), இவர் லாரியில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் லாரியிலிருந்து தார்ப்பாய்களை அவிழ்த்து மடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்தார். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விபத்தில் இறந்த கார்த்திகேயனுக்கு சந்திரா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory