» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு

சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)



தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் நடைபெறும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் இளம்பகவத்ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம், இன்று மற்றும் நாளை, காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. முகாம் நடைபெறும் மையங்களான பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விகாஸா பள்ளிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

பின்னர் ஆட்சியர் கூறும்போது, "சிறப்பு தீவிர திருத்தம் 2026 ன் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யவும், திரும்ப பெறவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று நடைபெறும் சிறப்பு முகாமினை தொடர்ந்து வாக்காளர்களுக்கு மேலும் உதவிடும் வகையில் நாளை 16-11-2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மேலும் ஒரு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது. 

இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் பிற துறை பணியாளர்கள் வாக்காளரிடம் இருந்து படிவங்களை பூர்த்தி செய்வதற்கும், படிவங்களை திரும்ப பெறுவதற்கும் உதவி செய்ய உள்ளனர். இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory