» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடிக்கு ரயிலில் 850 மெ. டன் யூரியா வரத்து

சனி 15, நவம்பர் 2025 8:22:43 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்துக்கு நடப்பு மானாவாரி, பிசான சாகுபடிக்காக ரயில் மூலம் 850 மெட்ரிக் டன் உரம் நேற்று கொண்டு வரப்பட்டது.

இது குறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா. பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 65,000 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்களின் விதைப்பு பணி நிறைவுற்று, தற்சமயம் மேல் உரம் இட வேண்டிய பருவத்தில் உள்ளது. மேலும் வாழை, நெல்லுக்குத் தேவையான உரங்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நவம்பர் மாத ஒதுக்கீட்டின் படி பெறப்பட்டு வருகின்றன.

அதன்படி, 850 மெ. டன் யூரியா, 220 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்தனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர மற்றொரு நிறுவனத்தில் இருந்து சுமார் 500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் பெறப்பட்டு கூட்டுறவுச் சங்கங்களுக்கு சனிக்கிழமை (நவ. 15) விநியோகம் செய்யப்படவுள்ளது.

தற்சமயம் மாவட்டத்தில் 3,000 மெட்ரிக் டன் யூரியா, 2,700 மெ. டன் டிஏபி, 3,200 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், உரங்களை தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory