» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டப்பேரவை இணைச் செயலாளர் திடீர் மரணம்

வியாழன் 13, நவம்பர் 2025 8:19:06 AM (IST)

தூத்துக்குடியில் ஆய்வுப் பணிகளுக்காக வந்த சட்டப்பேரவை இணைச் செயலாளர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழுவின் தலைவரான செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து நேற்று (நவ.,12 ) ஆய்வு மேற்கொள்ள வந்தனர். இந்தக் குழுவுடன் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக சட்டப்பேரவை இணைச் செயலாளர் ரமேஷ் (57 ) என்பவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவரை சபாநாயகர் அப்பாவு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுக்கணக்கு குழு தலைவரான செல்வப் பெருந்தகை, எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர்.

இதன் காரணமாக பொது கணக்கு குழுவின் ஆய்வு பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை  சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிர் இழந்தார். இதை அடுத்து அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory