» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 சிறுவர்கள் உட்பட 5பேர் கைது

புதன் 12, நவம்பர் 2025 10:40:24 AM (IST)

தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர்கள் அய்யம் பிள்ளை, பழனிச்சாமி, ஞானகுரு மற்றும் தலைமை காவலர் பொன்ராம் ஆகியோர் நேற்று இரவு புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோடு கேம்ப் 1 சர்வீஸ் ரோட்டில் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் பைக்கில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, பெட்ரோல் டேங்க் மேல் வைத்திருந்த சாக்குப் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, தெர்மல்நகர் கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி மகன் ரீகன் (21), சேகர் மகன் சதீஷ் (22) மற்றும் 3 இளம்சிறார்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory