» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அருட்தந்தையர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது: ஆயரிடம் மனு!

திங்கள் 10, நவம்பர் 2025 8:57:40 PM (IST)



தூத்துக்குடியில் அருட்தந்தையர்கள் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என்று ஆயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி பாண்டியாதி பரதவர் நல தலைமை சங்கம்  சார்பில் நிர்வாகிகள் மறைமாவட்ட ஆயரிடம் அளித்த மனுவில், "ஒரு திருத்தல இதழில், அத்திருத்தலத்தின் பெருமைகளையும், அங்கு நடந்த அற்புதங்களையும், பக்தர்களுக்கு கிடைத்த நற்பலன்களையும், அதன் சிறப்புகளையும் பற்றி எழுதுவதே சிறப்பானது ஆகும். 

தங்களின் சொந்த விருப்பு, வெறுப்பு அரசியல் பேச, அரசியல் பரப்புரை செய்ய திருத்தல இதழா கிடைத்தது? என்று பக்தர்களும், தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க மக்கள் அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். அவ்வாறு பரப்புரை செய்யும் அருட்தந்தையர்கள் ஒருசார்பான அரசியல் பேச வேண்டாம் என்று எவரும் அவர்களை தடுக்கவில்லை. 

மாறாக, ஒருசார்பான அரசியல் பேசவேண்டும் என்கின்ற விருப்பம் இருந்தால், தங்களின் அருட்பணியினை துறந்துவிட்டு, வீதிக்கு வந்து, மக்களோடு மக்களாக நின்று அரசியல் பேசினால் எவரும் யாரையும் விமர்சிக்க முடியாது என அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுவெளியில் விமர்சனம் செய்கின்றனர். இதில் உச்சபட்சமாக, இதுபோன்ற செயல்பாடுகளால் அருட்தந்தையர்களின் தனிப்பட்ட விஷயங்கள், பொதுவெளியில் விவாதிக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகளில், அருட்தந்தையர்கள் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது. திருத்தலங்கள் மற்றும் மறைமாவட்ட பங்குகள் ஒரு கட்சிக்கான அரசியல் மேடையாக ஒருபோதும் அனுமதிக்கப்படாது. சமூக மக்களுக்கான அரசியலை அவர்களே தீர்மானிப்பார்கள். மற்றவர்களின் விருப்ப அரசியலை சமூக மக்களிடம் திணிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

George Kuraliniyan DNov 11, 2025 - 09:45:22 PM | Posted IP 104.2*****

இதுப்போன்று அருட் தந்தையர்கள் அரசியலில் ஈடுப்பட கூடாது என்று கடந்த காலங்களில் யாரும் ஆயரிடம் மனுக் கொடுக்காமல் இப்போது மனு கொடுப்பதற்கான தேவை என்ன வந்தது ? மனுக் கொடுக்கும் சங்கத்தினரின் அரசியல் மற்றும் ஆன்மீகம் பற்றிய பார்வையையும் அவர்களின் புரிதல் என்னவென்றும் தெரியப்படுத்தினால் நலம் கடவுளின் பிரதிநிதிகளாக கருதப்படும் அருட் தந்தையர்கள் மக்களுக்கு தேவையான சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை எப்படி பேசினால் அது ஆன்மீகமாடும் அல்லது எப்படி பேசினால் அது அரசியலாகும் ? உதாரணத்திற்கு நமது திருவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூலான இணைச்சட்டம் 17வது அதிகாரம் 15வது வசனத்தை ஒரு குருவானவர் எப்படி திருச்சபை மக்களுக்கு போதிப்பார் என்பதையும் இந்த மனுதாரர்கள் சற்று விளக்கினால் நல்லது இதுப்போல இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு இப்படிக்கு தே ஜார்ஜ் குரலினியன்

SivaSriNov 11, 2025 - 03:40:37 PM | Posted IP 172.7*****

உண்மை தான் இவர்கள் அரசியல் பேசவோ கட்சி மை ஆதரவு படுத்தவோ நடுநிலை படுத்தவோ வரவில்லை.இவர்கள் ஆன்மீக பணி ஆற்றுவதற்கு வந்தவர்கள்.14ஆண்டுகள் படிக்க வந்தவர்கள்.இவர்கள் சமூக பணி கூட ஆற்றக்கூடாது.ஆன்மீக பணி பற்றி பேசுவதாக இருந்தால்.ஆன்மீக பணியை துறந்து விட்டு செல்லலாம்.நன்றி ✋🏻

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory