» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!

திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (60). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரும், தளவாய்புரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8-வது தெருவை சேர்ந்த பேச்சிராஜா (58) என்பவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது கோரம்பள்ளம் பகுதியில் மேம்பாலம் பணிக்காக வாகனங்கள் அணுகு சாலை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. அதில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரோட்டில் இருந்த சிமெண்ட் தடுப்பின் மீது கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பேச்சிராஜா படுகாயமடைந்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory