» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி பூஜை

புதன் 5, நவம்பர் 2025 8:31:04 PM (IST)



தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி பூஜை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரணை நடந்தது. அதன் பின்பு குமாரர் தெரு பச்சை சாத்து அன்பர்கள் குழு சார்பில் 108 பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை கோவில் பிரதான பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் செய்தனர். பின்னர் அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில், பச்சைசாத்து குழு என் நாகராஜன் வழக்கறிஞர் சுப்பிரமணியன் கேவி ராமலிங்கம், கோவில் அறங்காவலர்கள் செல்வ சித்ரா, அறிவழகன், மகாராஜன், பால குருசாமி, திருவிளக்கு கமிட்டி பொருளாளர் பாலு, நைனா, செயலாளர் மீனாட்சிநாதன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory