» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே 7 அடி குழியில் விழுந்த சினைப் பசு மாடு மீட்பு
புதன் 5, நவம்பர் 2025 8:02:37 PM (IST)

தூத்துக்குடி அருகே 7 அடி குழியில் விழுந்த சினைப் பசு மாட்டினை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுபாடு விஜிபி நகரில் புதியதாக வீடு கட்ட வானம் தோண்டிய குழியில் ஆனந்தன் என்பவரது சினைப் பசு மாடு கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த பசு மாட்டின் உரிமையாளர் ஆனந்தன் சிப்காட் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தை தொடர்பு கொண்டு பசு மாட்டினை மீட்டுத் தருமாறு உதவி கோரினார்.
உடனடியாக சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கிராஜன், தவசி, ராம்குமார், முத்து ஜெயக்குமார் வெங்கிடசாமி ஆகிய தீயணைப்பு வீரர்கள் விரைந்து ஸ்தலம் வந்து 5 அடி நீள, அகலம், 7 அடி குழியில் விழுந்து கிடந்த சினைப் பசு மாட்டினை கயிறுகளால் கட்டி ஜேசிபி மூலம் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். எவ்வித காயமுமின்றி சினைப் பசுமாட்டினை மீட்ட சிப்காட் தீயணைப்பு வீரர்களை அப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








