» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை சார்பாக கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:13:37 PM (IST)

தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பாக உள்ள விளையாட்டு வளாகத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்பின் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் முன்னெடுப்பின் படி புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த விளையாட்டு அரங்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்பின் மாணவர்களின் விளையாட்டு பயிற்சியை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க விளையாட்டு பயிற்சி மூலம் நல்வழிப்படுத்துவதற்காகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு அரங்கத்தை உருவாக்க உதவிய காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி தொடர்ந்து இதனை சிறப்பாக பாராமரிக்குமாறு காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








