» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!

திங்கள் 3, நவம்பர் 2025 3:47:54 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தாளமுத்து நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாஸ்கர் (51), இவலட ஏபிசி மகாலட்சுமி கல்லூரி எதிர்ப்புறம் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பணிபுரிந்து வருகின்றார். இன்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கைகளால் தாக்கி அவரிடம் இருந்த மணி பர்சையும் அதிலிருந்த 1500 பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory