» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
திங்கள் 3, நவம்பர் 2025 3:47:54 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாஸ்கர் (51), இவலட ஏபிசி மகாலட்சுமி கல்லூரி எதிர்ப்புறம் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பணிபுரிந்து வருகின்றார். இன்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கைகளால் தாக்கி அவரிடம் இருந்த மணி பர்சையும் அதிலிருந்த 1500 பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








