» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : நெல்லை சரக டிஐஜி ஆய்வு!

வியாழன் 16, அக்டோபர் 2025 9:28:39 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு)  சந்தோஷ் ஹடிமணி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. இந்த திருவிழாவை  முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு)  சந்தோஷ் ஹடிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருக்கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மகேஷ் குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர்  ராமு  ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory