» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

புதன் 3, செப்டம்பர் 2025 4:58:56 PM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர். 

கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவிகள் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

விழாவிற்கு கல்லூரி துணை முதல்வர்  அருட்சகோதரி எழிலரசி தலைமை வகித்தார். இந்நிகழ்வில்  பல்வேறு துறை மாணவிகள்  அத்தப்பூ கோலம் போட்டு, உற்சாகமாக நடனமாடினார்கள்,  தொடர்ந்து மாணவிகள்  தங்களின் பேராசிரியர்களையும்  அழைத்து நடனமாட வைத்து மகிழ்ந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory